Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com
தமிழகம்
இந்தியா

விளையாட்டு

சினிமா

தொழில்நுட்பம்

மருத்துவம்

Recent Posts

காந்தி 150 - குமரி முனையில் மக்கள் ஒற்றுமை உறுதியேற்பு

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள்நலக்குழு சார்பில் மகாத்மா காந்தியின்150 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமையன்று கன்னியா குமரி யில் மக்கள் ஒற்றுமை உறுதி யேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது தலைமை வகித்தார். 

மாவட்ட தலைவர் ஜி.சுப்பிரமணியம், மாநில பொருளாளர் எம்.அகமது உசேன், மாவட்ட நிர்வாகிகள் விஜயமோகனன், எஸ்.அந்தோணி, சுதந்திர போராட்ட வீரர் கொடிக்கால் ஷேக் அப்துல்லா, மூத்த வழக்கறிஞர் ஜி.செலஸ்டின், பேராசிரியர் கணேசன்,கே.தங்கமோகன் ஆகியோர் உரையாற்றினர். மு.சம்சுதீன் நன்றி கூறினார். 

 இதில், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு நிர்வாகி என்.எஸ்.கண்ணன், மோகன், பெஞ்சமின், லட் சுமி, எ.எம்.வி.டெல்பின் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி தொடக்கம்

விருதுநகர், அக்.2-2019 ஆம் ஆண்டு நடைபெற உள்ளநாடாளுமன்றத் தேர்தலையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்காளர் சரிபார்ப்பு தணிக்கை இயந்திரங்கள் ஆகியவை பொறியாளர்களால் சரிபார்க்கும் பணிதிங்களன்று தொடங்கப்பட்டது. விருதுநகர் கச்சேரி சாலையில் உள்ள இராமநாதபுரம் மாவட்ட ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு தணிக்கை இயந்திரங்கள் ஆகியவை வைக்கப்பட்டு அந்த அறை பூட்டி சீல்வைக்கப்பட்டது. 

இதையடுத்து, அந்த அறை அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமா ர்முன்னிலையில் திறக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்டஆட்சித் தலைவர் அ.சிவஞானம் பார்வையிட்டார். பின்பு,வாக்குப் பதிவு இயந்திரங்களை விரைவில் சரிபார்க்கும் பொறியாளர்களுக்கு தேவையான மேஜை, நாற்காலி மற்றும் மின் விசிறி, ஏர் கூலர்உள்ளிட்ட வசதிகளை செய்யுமாறு அறிவுறுத்தினார். 

மேலும், அப்பகுதி முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்திட காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அங்கு ஏராளமான காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும், அரசியல் கட்சி பிரதிநிதிகள் பார்வையிட, அடையாள அட்டை மற்றும் தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

காந்திக்கு மரியாதை...

திருப்பூர் காந்தி நகர் பகுதியில் மகாத்மா காந்தியின் அஸ்தி பாதுகாக்கப்பட்டு வருகிறது. அங்கு, காந்தியின் 150 வது பிறந்தநாளையொட்டி காந்தியின் வேடம் அணிந்து தமிழ்நாடு பாலர் மைய குழந்தைகள் அஞ்சலி செலுத்தினர். கைத்தறி இயந்திரம், மற்றும் ராட்டை, பிரிண்டிங் இயந்திரம் ஆகியவற்றை பார்வையிட்டு அதனை பற்றி விளக்கம் கேட்டறிந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் காந்தி வேடம் அணிந்து வந்தது காண்போரைக் கவர்ந்தது.

விவசாயிகள் மீது தாக்குதல்; கண்ணீர் புகைக் குண்டு வீச்சு தில்லி போலீஸ் வெறியாட்டம்

விளை பொருட்களுக்கு உரியவிலை கேட்டு தில்லி மாநகரத்திற்குள்நுழைய முயன்ற உத்தர்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக் கான விவசாயிகள் மீது மோடி அரசு காவல்துறையை ஏவி கொடூரமான தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டது. இத்தாக்குதலை அகில இந்திய விவசாயிகள் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. விவசாய விளைப் பொருட் களுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மின்கட்ட ணத்தை குறைக்க வேண்டும். பெட் ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உத்தர்கண்ட் மாநில விவசாயிகள் டிராக்டர்கள், பேருந்துகள், சிறு வாகனங் களில் தில்லியை நோக்கி பேரணி யாக வந்தனர்.கிஷான்கிரந்தி யாத்திரா என்ற பெயரில் செப்டம்பர் 23ஆம் தேதி ஹரித்துவாரில் புறப்பட்ட பாரதிய கிஷான் யூனியன் தலைமையிலான விவசாயிகளுடன் வழிநெடுகிலும் ஏராளமான விவசாயிகள் இணைந்து கொண்டனர். தில்லியை நெருங்கும் போது பல்லாயிரக்கணக்கில் விவசாயிகள் திரண்டனர். அக்டோபர் 2 அன்றுதலைநகர் தில்லியில் உள்ள கிஷான்கட்பகுதியில் போராட்டம் நடத்த முடிவு செய்து வந்த விவசாயிகளை, உத்தரப் பிரதேசம் - தில்லி எல்லையில் அமைந்துள்ள காஸிப்பூரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தில்லிகாவல்துறையினர் தடுத்து நிறுத்தி கண்ணீர்புகைக்குண்டுகளை வீசி,அவர்கள் மீது கொடூரமான தாக்கு தலை கட்டவிழ்த்துவிட்டனர். தடியடிதாக்குதல் தண்ணீர் பீய்ச்சி அடித்தல்என பல்வேறு வழிகளில் விவசாயிகளின் யாத்திரை மீது காவல்துறை யினர் வெறியாட்டம் போட்டனர். இதனால் உ.பி. கேட் என அழைக்கப்படும் காஸிப்பூர் பகுதியின் தேசிய நெடுஞ் சாலை போர்க்களமாக காட்சி அளித்தது. 


 தில்லிக்குள் அனுமதிக்க விடாமல்விவசாயிகளை தடுத்து நிறுத்தியதை எதிர்க்கட்சிகள் வன்மை யாகக் கண்டித்துள்ளன. விவசாயிகள்போராட்டத்திற்கு சமூக வலைத் தளங்களில் ஆதரவு பெருகியுள்ளது. இதற்கிடையே விவசாயிகள் தரப்பிடம்மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அவர் அளித்த உத்தரவாதத்தை ஏற்க முடியாது என்றும் போராட்டம் தொடரும் எனவும் விவசாயிகள் தெரி வித்துள்ளனர்.இதுதொடர்பாக கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே, பொதுச்செயலாளர் ஹன்னன் முல்லா ஆகியோர், “தில்லி மாநகரம், விவசாயி களுக்கு சொந்தமில்லையா? தங்களதுகோரிக்கைகளை அரசுக்கு தெரி விப்பதற்காக விவசாயிகள் தில்லிக்குள் நுழையக்கூடாதா? அப்படிப்பட்ட மத்திய அரசின் அடக்குமுறையை இந்திய விவசாயிகள் உடைத்து நொறுக்குவார்கள். 2018 நவம்பர் 28 அன்று நாட்டின் மூன்று முனைகளிலிருந்து தில்லி நோக்கி அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் விவசாயிகள் விடுதலைப் பேரணி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் அமைப்புகள் ஒன்றுதிரண்டு அகிலஇந்திய விவசாயிகள் எழுச்சிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக் கில் விவசாயிகள் தில்லியை முற்றுகையிடுவார்கள். அப்போது மோடி அரசுஎன்ன செய்கிறது என்று பார்ப்போம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காணொளிகள்
[vuukle-powerbar-top]

Recent Post