சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்ற முதலமைச்சர், அமைச்சர்கள் பதவியேற்ற அரசுவிழாவில், தமிழக வரலாற்றில் மிகப்பெரிய எதிர்கட்சியாக உருவெடுத்துள்ள திமுகவின் மு.க. ஸ்டாலின் உட்கார கூட்டத்தோடு கூட்டமாக இடம்போடப்பட்டு, அதே தேர்தலில் தோற்றுப்போன சரத்குமாருக்கு முதல் வரிசையில் இடம் போட்டு அமர வைத்து, வேண்டுமென்றே திமுகவை அவமானப்படுத்திய ஜெயலலிதாவைப் பார்க்கும்போது இன்னும் அவர் திருந்தவில்லை, திருந்தப்போவதுமில்லை என்று தெளிவாகப் புரிகிறது என்று பொரிந்து தள்ளினார் கலைஞர்.