முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 25 வது நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான வீர பூமியில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து ராஜீவ் காந்தியின் மனைவியும் காங்கிரஸ் கட்சித் தலைவருமான சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா வதோரா, ராபர்ட் வதோரா உள்ளிட்டார் அஞ்சலி செலுத்தினர்.