அதிமுக மீண்டும் ஆட்சியமைத்தால், இலங்கையின் வடபகுதி தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை பெற்றுத் தரப்படும் என தன் தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா கூறியிருந்தார் என தெரிவித்துள்ள இலங்கை தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் வசந்தபண்டார , வடபகுதி தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமை பெற்றுத் தரப்பட்டால், தனித்தமிழீழம் என்பது தானாகவே உருவெடுக்கும். எனவே இது இலங்கைக்கு ஆபத்து என தெரிவித்துள்ளார்.