தாய்லாந்தின் சியாங் ராய் மாகாணத்தில் பெண்கள் குழந்தைகள் காப்பகம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கி 17 மாணவிகள் உயிரிழந்துள்ளதாகவும், பல பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி இரவு 11 மணிக்கு இந்த தீ விபத்து நடந்ததாகவும், அப்போது அங்கு 34 பெண் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்ததாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தீ விபத்து காரணமாக வெள்ளி வரை பள்ளி மூடப்படும் என பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது