ஆலந்தூர் சிமெண்ட் சாலையில் இருந்து மீனம்பாக்கம் காவல் நிலையம் வரை அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையில் சென்னை மெட்ரோ சோதனை ஓட்டம் நடைபெற்றது.
5.5 கி.மீ நீளம் கொண்ட இந்த பாதையில் மெட்ரோ சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றதாகவும், பாதுகாப்பு ஆணையரின் சான்றிதழ் கிடைத்தவுடன் மத்திய, மாநில அரசுகளின் அறிவுரையை கேட்டு ஜூன் மாதம் இறுதி அல்லது ஜூலை மாதத்தில் ஆலந்தூர்-விமான நிலையம் இடையே ரெயில் சேவை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை மெட்ரோ நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.