டெல்லி அருகே ஏர் அம்புலன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது. படுகாயங்களுடன் பாட்னா வில் இருந்து டெல்லிக்கு ஒருவரை கொண்டு வரும் வழியிலையே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
புதுடெல்லி விமான நிலையத்தின் அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில், பயணம் செய்த 7 பேரும் பெரிய காயங்கள் ஏதுமின்றி தப்பித்தனர். விபத்துக்கு முன்னால் விமானத்தின் இஞ்சின் கோளாறு ஏற்பட்டதாக விமானி கூறியது குறிப்பிடத்தக்கது. போலிஸ், தீயணைப்பு படை என அனைவரும் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.