நீண்ட நாட்களாக உலக நாயகன் கமல் ஹாசனை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை "வேட்டையாடு விளையாடு" படத்தின் மூலமாக இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு நிறைவேறியது.
என்னதான் ஒரு படத்தை கமலை வைத்து இயக்கியிருந்தாலும் இன்னும் அவர் ஆசை குறையவில்லை. அண்மையில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட கெளதம் மேனன்,உலக நாயகன் கமலை வைத்து எத்தனை படங்கள் எடுக்க சொன்னாலும் சற்றும் தளராமல் புதுவித உற்சாகத்துடன் அவருக்கான கதையை தயார் செய்துவிடுவேன் என கூறியிருந்தார்.
அத்துடன் பல மிக பெரிய வெற்றிப்படங்களை இயக்கிய கெளதம் மேனனுக்கு இன்னுமோர் நீண்ட நாள் ஆசை நடிகர் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது.
தமிழ் சினிமாவின் மிகப் பெரும் இயக்குனர் சிகரங்களான ஷங்கர் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் தவிர்த்து ரஜினி அடுத்த கட்டமாக விரும்புவது இயக்குனர் கெளதம் மேனன் அவர்களையே.