Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மதச்சட்டத்தால் நிகழ்ந்த மரணம் - அயர்லாந்தில் வலுக்கும் போராட்டம்


அயர்லாந்தில் உள்ள மதச்சட்டத்தால் இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


கர்நாடகாவைச் சேர்ந்தவர் 31 வயதான சவிதா.அயர்லாந்தில் பல் மருத்துவராக பணியாற்றி வந்த அவர் கர்ப்பமாக இருந்தார்.அவரது உடல்நிலை  திடீரென மோசமடைந்ததால் அங்குள்ள கேல்வே பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சிசுவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டதால் கருக்கலைப்புச் செய்து கொள்ள விரும்புதாக வற்புறுத்திய அவருக்கு கருகலைப்புச் செய்ய மருத்துவர்கள் மறுத்து விட்டனர்.

காரணம் அயர்லாந்தில் உள்ள மதச்சட்டத்தின் படி பெண்கள் கருகலைப்பு செய்யக்கூடாது.இந்த நிலையில் கடந்த 28-ம் தேதி சவிதா உயிரிழந்தார். மருத்துவமனையின் அலட்சியமே மனைவியின் மரணத்திற்கு காரணம் என்று சவிதாவின் கணவர் பிரவீன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து, அயலர்ந்து சுகாராத்துறை விசாரணை நடத்தி வருகிறது. கேல்வே பல்கலைக்கழக மருத்துவமனையும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் மதாசட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தி வருகின்றனர்.கடுமையான மதச்சட்டங்களால் நிகழும் மரணங்கள் இன்னும் தொடர்கதையாகவே உள்ளது.

[vuukle-powerbar-top]

Recent Post