அயர்லந்தில், இந்தியாவைச் சேர்ந்த கர்பிணி ஒருவர் உயிரிழந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுததியுள்ளது. அவருக்கு கருக்கலைப்புச் செய்ய மருத்துவர்கள் மறுத்ததால் அவர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சவீதா ஹலப்பநவர் என்னும் 31 வயதான அவர் பல் மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், தனக்கு கடும் முதுகுவலி இருப்பதால், தான் கருக்கலைப்புச் செய்து கொள்ள விரும்புதாக கூறி கால்வே பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கணவருடன் சென்றுள்ளார். ஆனால், அயர்லந்தில் மதச்சட்டப்படி கருக்கலைப்பு தடைச் செய்யப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
எனினும், தான் மாற்று மதத்தைச் சேர்ந்தவர் என்று சவீதா எடுத்துக் கூறியும் மருத்துவமனை தரப்பில் மறுத்துவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த 28-ம் தேதி அவர் உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து, மருத்துவமனையின் பிடிவாதமே தனது மனைவியின் மரணத்திற்கு காரணம் என்று சவீதாவின் கணவர் பிரவீன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையடுத்து, அந்நாட்டு சுகாராத்துறை சவீதாவின் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், கால்வே பல்கலைக்கழக மருத்துவமனையும் தனியே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.