Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

உத்தரப் பிரதேசத்தில் 45 நாள் பெண் குழந்தை எரித்துக் கொல்ல முயற்சி கணவன் மனைவி கைது



உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிலாகுவா என்ற இடத்தில் ஒன்றரை மாதப் பெண் குழந்தையை உயிரோடு எரித்துக் கொல்ல முயன்றதாக அந்தக் குழந்தையின் பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.

அங்குள்ள சுடுகாடு ஒன்றில் குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்குள்ளவர்கள் போலீசாரிடம் கூறினர். விசாரணையில், அந்தக் குழந்தையின் பெற்றோரான தினேஷ்குமார்&பாரதிராணி கைது செய்யப்பட்டனர்.

எதிர்காலத்தில் அந்தக் குழந்தை கடும் நோயினால் பாதிக்கப்படும் என்று ஒரு சாமியார் கூறியதைக் கேட்டு குழந்தையை உயிரோடு கொல்ல முயன்றிருக்கின்றனர். போலீசார் சாமியாரைத் தேடி வருகின்றனர்.
[vuukle-powerbar-top]

Recent Post