ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகாராஷ்டிராவிற்கு மேற்கொள்ள இருந்த சுற்று பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது என ராஷ்டிரபதி பவன் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
ஜனாதிபதி அவர்கள் 2 நாள் பயணமாக மும்பை மற்றும் ஷீரடி ஆகிய இடங்களுக்கு சென்று இன்றைய நிகழ்ச்சியில் ஜாம்னலால் பஜாஜ் விருதுகளை வழங்கவும், நாளைய தினம் ஸ்ரீ சாய் நிவாஸ் தரம்சாலாவை ஷீரடியில் தொடங்கி வைக்கவும் செல்வதாக இருந்தது. எனினும், இந்த பயணம் இன்று ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.