சென்னை விமான நிலையத்தில் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் புதுடெல்லி செல்வதற்காக நேற்று தயாராக இருந்தார்.
அப்பொழுது, 37 வயது நிறைந்த வாலிபர் ஒருவர் அவரை புகைப்படம் எடுத்து கொண்டிருந்தார். சந்தேகத்திற்கு இடமான நபரின் செயல்பாடுகளை தொடர்ந்து காவல்துறை அவரை கைது செய்தனர்.
அவரிடம் புதுடெல்லி வரை செல்வதற்கும், பின்பு அங்கிருந்து துபாய் செல்வதற்குமான விமான பயணச்சீட்டுக்கள் இருந்தன.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விமான நிலையம் அருகே தன்னை புகைப்படம் எடுத்தவரை காவல்துறை கைது செய்தது தனக்கு ஆச்சரியமளிக்கிறது என்றும் அந்த நபரை உடனடியாக விடுவிக்கும்படியும் ப. சிதம்பரம் இன்று கேட்டு கொண்டார்.