இலங்கை சீனஅரசின் தொடர்பாடலுடன் சம்மந்தப்பட்ட இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரித்த செய்மதி ஒன்று நவம்பர் 22 ஆம் நாள் வானில் ஏவப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனா பீஜிங் நகரில் அமைந்துள்ள சின்பேன்ங் செய்மதி ஏவுதளத்தில் இருந்து இது ஏவப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் 22 ஆம் நாள் இரவு 9.30 மணிக்கு ஏவப்படும் இந்த செய்மதி குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் இலங்கைக்கு நேராக விண்ணில் வலம்வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
360 மில்லியன் அமெரில்ல டொலர் செலவில் அமைக்கப்பட்ட இந்த செய்மதியின் கட்டுப்பாட்டுத்தளத்தினை சீனா கண்டியில் அமைத்துக்கொடுத்துள்ளது.