Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்திய தாய்கள் பலவீனமானவர்கள்: ஆய்வு முடிவு



உலக அம்மாக்கள் 2012 என்ற பெயரில் குழந்தைகளைக் காப்பாற்றுவோம் என்ற அமைப்பு ஒரு ஆய்வை மேற்கொண்டது.

அதில், சென்ற வருடத்தைவிட ஒரு படி கீழே இறங்கியுள்ளனர் இந்திய அம்மாக்கள். அதாவது, 75-வது இடத்திலிருந்து 76-வது இடத்துக்குச் சென்றுள்ளனர்.

சீனா, இலங்கையைவிட குழந்தை பிறப்பின்போது போதிய சத்து இல்லாமல் 140 இந்தியப் பெண்கள் இறக்கின்றனர்.

பிரசவ காலத்தில் போதிய சத்துக் குறைவாலும் போதிய படிப்பின்மையினாலும் இவை நிகழ்கின்றன என்று ஆய்வுக் குறிப்பு கூறுகிறது.

ஆசிய நாடுகளில் குழந்தைகளைப் பேணி காப்பதில் பங்களாதேஷ் மற்றும் நேபாள் நாடுகள் நன்று என்றும், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகள் பரவாயில்லை என்றும், பாகிஸ்தான் மற்றும் வியட்நாம் நாடுகள் மோசம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post