Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

86 கோடி ரூபாய் செலவில் வீட்டை புதுப்பித்த மாயாவதி



லக்னோவில் உள்ள தனது வீட்டை 86 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்துள்ளார் மாயாவதி. தகவல் பெறும் ஆணையத்தின் மூலம் இந்தத் தகவல பெறப்பட்டுள்ளது.

லக்னோவில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வீடு மாயாவதி முதலமைச்சராக இருந்தபோது அரசினால் கொடுக்கப்படவில்லை.

இவர் 1990-ல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது சமாஜ்வாடி கட்சியினரால் கொடுக்கப்பட்டது. மாயாவதி முதல்வராக இருந்தபோது இந்த இல்லத்தைச் சீரமைத்து, விலையுயர்ந்த பொருட்களால் இல்லத்தை அழகுபடுத்தினார்.

14 விருந்தினர் இல்லங்களோடு குண்டு துளைக்காத வீட்டின் வராண்டா அமைத்தார். இவரது ஆளுயர உருவச்சிலையையும் கட்சியின் சின்னமான யானை சிலையையும் அமைத்துக் கொண்டார்.

வீட்டின் சுற்றுச்சுவர் பளிங்குக் கற்களினால் அமைக்கப்பட்டது. இந்த இல்லம் புதுப்பிப்பதற்கான நிதி எவ்விதம் பெறப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று யாதவ் கூறினார்.
[vuukle-powerbar-top]

Recent Post