Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

போக்குவரத்து துறையில் 16,661 பணியிடங்கள் நிரப்பபடும் ஜெயலலிதா அறிவிப்பு

முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று 110 வது விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார். 

அதில் போக்குவரத்து துறையில் நடப்பு ஆண்டில் 16,661 பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. அதில் 6910 டிரைவர்கள், 7402 கன்டெக்டர்கள் மற்றும் 2349 தொழிலாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர். 

2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஓய்வு பெற்ற 2,316 தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய ஒப்படைப்பு தொகையான 47 கோடியே 71 லட்சம் ரூபாய் இந்த மாதத்திலேயே வழங்கப்படும். 

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக தடப் பேருந்துகளின் எண்ணிக்கை 905-லிருந்து 1,761-ஆக அதிகரிக்கப்படுவதை அடுத்து, ஸ்ரீரங்கம், திண்டுக்கல், தேனி, காரைக்குடி, கரூர், ஈரோடு மற்றும் ஓசூர் ஆகிய ஏழு இடங்களில் புதிய பணிமனைகள் அமைக்கப்படும் என்பதையும், கூடுதல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் பொது மேலாளர் அலுவலகம் ஒன்று தோற்றுவிக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து அரசு பஸ்களிலும் எலக்ட்ரானிக் பயண சீட்டு வழங்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post