
இந்நிலையில் இக்கப்பலை மீட்க இந்திய அரசு பல வகைகளில் முயற்சி மேற்கொண்டது. ஆனால் எந்த பலனுமில்லாமல் இருந்தது, இதைத் தொடர்ந்து, கப்பலின் உள் இருந்த தண்ணீரை வெளியேற்றி எடையைக் குறைத்து, பின் இழுவைக்கப்பல் மூலம் இழுத்ததில் கப்பல் நகர்ந்துவிட்டது.
இன்று ஏழாவது முறையாக மேற்கொள்ளப் பட்ட முயற்சியில் கப்பல் ஆழ்கடலுக்குள் சென்றது. இதனால் மீட்புப் பணியில் இருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கப்பல் மீட்புப் பணியை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் நேரில் பார்வையிட்டார்.