தமிழ் திரையுலகின் இளம் இயக்குனரான கெளரவ் மிக சந்தோசமாக உள்ளார் காரணம் அவர் இயக்கிய தூங்கா நகரம் படத்திற்கு இரண்டு சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளன.
அண்மையில் துபாய் நகரில் நடைபெற்ற, துபாய் பட விழாவில், சிறந்த புதுமுக இயக்குனருக்கான விருது தூங்கா நகரம் படத்திற்காக கெளரவிற்கு வழங்கப்பட்டது.. அதேபோல் நோர்வேயில் நடைபெற்ற தமிழ் பட விழாவில் சிறந்த கலாசார படத்திற்கான விருது கெளரவ் இயக்கிய தூங்கா நகாரம் படத்திற்கு வழங்கப்பட்டது.
வெற்றிக்களிப்பில் இருக்கும் இயக்குனர் கெளரவ் அவர்களை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது,தாம் மிக சந்தோசமாக இருப்பதாகவும்,தான் இயக்கிய தூங்கா நகரம் படமானது வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளதாகவும்,அத்தோடு இவ்வாறு சர்வதேச அரங்கிலும் வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் கூறிய கெளரவ், தூங்கா நகரம் படமானது 4 .5 கோடியிலேயே தயாரானதாகவும்,ஆனால் வணிக ரீதியாக சுமார் 11 கோடி வசூலானதாகவும் தெரிவித்தார்.இதனால் தனது தயாரிப்பாளர்கள் மற்றும் பட விநியோகஸ்தர்கள் சந்தோசத்தில் இருப்பதாகவும், இதேவேளை சர்வதேச விருதுகளால் தான் மிக சந்தோசத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
அவருடைய அடுத்த படம் பற்றி கேள்வி எழுப்பிய போது,தனது அடுத்த படைப்பாக சிகரம் தொடு என்ற படத்தை இயக்கவுள்ளதாகாவும்,இப்படமானது,தந்தை மகன் இடையேயுள்ள இணைப்பு பற்றிய கதையை மையமாக வைத்து உருவாக உள்ளதாகவும்,நகைச்சுவை கலந்த அதிரடிப்படமாக இது அமையவுள்ளதாகாவும் கூறினார்.
கடந்த எட்டு மாத காலமாக இப்படத்திற்கான கதையை தான் எழுதியதாகவும்,இப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள் சீக்கிரம் அறிவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார் அத்துடன் தன்னை பொறுத்த வரை படங்களை இயக்குவதிலேயே முழுக்கவனமும் உள்ளதாகவும்,படங்களில் நடிக்க தான் விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.