தமிழ் சினிமா உலகத்தில் புதிதாய் பரவி வரும் ஒரு அம்சமாக தெலுகு திரையுலகத்தை சேர்ந்த பிரபல நட்சத்திரங்களின் படங்களை தமிழிலும் வெளியிடும் கலாச்சாரம் பரவி வருகிறது.தமிழ் திரையுலகத்தை சேர்ந்த நடிகர்கள் விக்ரம்,சூர்யா,கார்த்தி மற்றும் ஆர்யா வின் படங்கள் தமிழில் வெற்றியடைவது மட்டுமன்றி, தெலுகிலும் மிக பெரிய அளவில் வெற்றி பெறுகின்றன.
இதன் காரணமாக மிக பெரியளவிலான தெலுகு இரசிகர்கள் பட்டாளம் அவர்களுக்கு இருக்கிறது.இதைக்கண்டு கொண்ட தெலுகு நட்சத்திரங்கள் தமிழிலும் தம் இரசிகர்களை விரிவுபடுத்த நினைத்து தாம் நடித்த தெலுகு படங்களை தமிழிலும் வெளியிட்டனர்.
இவ்வாறு தெலுகுவில் வெளியாகி, அதே சமயம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்ட ஒரு சில படங்கள் தவிர்த்து ஏனைய படங்கள் அனைத்தும் சொல்லிக்கொள்ளும் அளவில் தமிழ் இரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்படாமல் தோல்வியையே சந்தித்தன.
தெலுகுவில் வெளியான படங்களில் அருந்ததி,மகதீரா மற்றும் ரகளை போன்ற படங்கள் தமிழில் மிக பெரிய அளவில் வெற்றிபெற்றன.இதனை தொடர்ந்து பல தெலுகு படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ளது.
தமிழில் தயாராகும் சில படங்கள் தெலுகு இரசிகர்களையும் கருத்தில் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.அண்மையில் தயாராகும் ரஜினிகாந்தின் கோச்சடையான்,கமல் ஹாசனின் விஸ்வரூபம்,மற்றும் கெளதம் வாசுதேவ் மேனனின் நீதானே என் பொன் வசந்தம் ஆகிய படங்கள் ஒரே நேரத்தில் அதாவது தமிழ் மற்றும் தெலுகுவில் தயாராகிக்கொண்டுள்ளன.
இதன் காரணமாக மிக பெரியளவிலான தெலுகு இரசிகர்கள் பட்டாளம் அவர்களுக்கு இருக்கிறது.இதைக்கண்டு கொண்ட தெலுகு நட்சத்திரங்கள் தமிழிலும் தம் இரசிகர்களை விரிவுபடுத்த நினைத்து தாம் நடித்த தெலுகு படங்களை தமிழிலும் வெளியிட்டனர்.
இவ்வாறு தெலுகுவில் வெளியாகி, அதே சமயம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்ட ஒரு சில படங்கள் தவிர்த்து ஏனைய படங்கள் அனைத்தும் சொல்லிக்கொள்ளும் அளவில் தமிழ் இரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்படாமல் தோல்வியையே சந்தித்தன.
தெலுகுவில் வெளியான படங்களில் அருந்ததி,மகதீரா மற்றும் ரகளை போன்ற படங்கள் தமிழில் மிக பெரிய அளவில் வெற்றிபெற்றன.இதனை தொடர்ந்து பல தெலுகு படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ளது.
தமிழில் தயாராகும் சில படங்கள் தெலுகு இரசிகர்களையும் கருத்தில் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.அண்மையில் தயாராகும் ரஜினிகாந்தின் கோச்சடையான்,கமல் ஹாசனின் விஸ்வரூபம்,மற்றும் கெளதம் வாசுதேவ் மேனனின் நீதானே என் பொன் வசந்தம் ஆகிய படங்கள் ஒரே நேரத்தில் அதாவது தமிழ் மற்றும் தெலுகுவில் தயாராகிக்கொண்டுள்ளன.