ஏர் இந்தியா நிறுவனத்தை சேர்ந்த விமானிகள் இன்று காலை முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் சர்வதேச விமான சேவை பாதிக்கப்பட்டது. இந்த வேலைநிறுத்த போராட்டத்தை முறியடிக்க, இன்று மாலை 6 மணிக்குள் வேலைக்கு வரவேண்டும்.
இல்லையேல் பணிநீக்கம் செய்யப்படுவீர்கள் என்று ஏர் இந்தியா நிர்வாகம் கடுமையாக கூறியது. பணிக்கு வராத 10 விமானிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும் விமானிகள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்த விமானிகள் சங்கத்தின் அங்கீகாரத்தையும் ரத்து செய்வதாக ஏர் இந்தியா நிர்வாகம் அறிவித்துள்ளது.