Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முக்கிய தலைவர்களை கொல்ல சதி திட்டம் தீட்டிய தீவிரவாதிகள் கைது

பெங்களூரை குண்டு வைத்து தகர்க்கவும், இந்து அமைப்புகளின் முக்கிய தலைவர்களை கொலை செய்யவும் சதித்திட்டம் தீட்டியதாக பீகாரிலும், பெங்களூரிலும் 2 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்தனர். குண்டு வெடிப்பு பெங்களூரில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் 17-ந் தேதி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தபோது ஸ்டேடியத்துக்கு வெளியே 2 குண்டுகள் வெடித்தன. இதில் 15 பேர் காயம் அடைந்தனர். 

இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக ஏற்கனவே பீகார் மாநிலத்தை சேர்ந்த முகமது சித்திக், அப்தாப் ஆலம், முகம்மது தாரிக் அன்ஜும் ஹாசன், காய் அகமது ஜமாலி, கவுர் ஆசிஷ் கோமினி, கமல்ஹசன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். பீகாரில் மேலும் ஒரு தீவிரவாதி கைது இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒரு தீவிரவாதி முகமது கபீல் அக்தர் (வயது 26) பீகார் மாநிலம், தர்பாங்கா மாவட்டம், பரஸ்மேலா கிராமத்தில் பதுங்கி இருப்பதாக பெங்களூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதைத்தொடர்ந்து பெங்களூரில் இருந்து சென்ற ஒரு போலீஸ் படை கடந்த 6-ந் தேதி அவன் பதுங்கி இருந்த வீட்டை முற்றுகையிட்டு துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, தங்களது காவலில் எடுத்து விசாரித்தனர். இந்தியன் முஜாகிதீன் அமைப்பு இவன் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்த யாசின்பட்கல்லின் கூட்டாளி என்று விசாரணையில் தெரியவந்தது. யாசின்பட்கலுக்கு சிம்கார்டு, செல்போன் போன்றவற்றை முகமது கபீல் கொடுத்து உதவி செய்துள்ளான் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. 

அவனிடம் மேலும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.  இவன் பிடிபட்டதன் மூலம் பெங்களூர் கிரிக்கெட் ஸ்டேடிய குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரு தீவிரவாதி கைது இதற்கிடையே பாகிஸ்தானின் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய மேலும் ஒரு தீவிரவாதியையும் பெங்களூர் போலீசார் கைது செய்து உள்ளனர். அந்த தீவிரவாதியின் பெயர் அப்துல் ரகுமான் (25). பெங்களூர் சாம்ராஜ்பேட்டை திபுநகரை சேர்ந்தவன். 

ஆரம்ப காலங்களில் திருட்டு, கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டு வந்தவன். சிமோகாவை சேர்ந்த கொள்ளைக்காரன் விக்ரமை கொலை செய்த வழக்கில், கொலையாளிகளுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்ததகவும், மேலும் ஒரு கொலை முயற்சியிலும் அவன் மீது வழக்குகள் உள்ளன. சிறையில் பழக்கம் பல வழக்குகளில் இவனை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். ஜெயிலில் அவனுக்கு, பாகிஸ்தானின் `அல் பதர்' தீவிரவாத அமைபை சேர்ந்த பகாத் மற்றும் அப்சர் ஆகியோருடன் தொடர்பு ஏற்பட்டது.  அவர்கள் தீவிரவாதம் பற்றிய வீடியோ படம் மற்றும் புத்தகங்களை அவனுக்கு வழங்கி அவனை தங்கள் பக்கம் இழுத்தனர்.  

மேலும் பாகிஸ்தானில் உள்ள லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பு நிர்வாகிகளுக்கு அவனை தொலைபேசி மூலம் அறிமுகம் செய்து வைத்தனர். தலைமறைவு இந்த நிலையில், பெங்களூர் ஜெயிலில் இருந்த பகாத் மற்றும் அப்சரை குல்பர்கா ஜெயிலுக்கு இடம் மாற்றினர். 

 கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அப்துல் ரகுமான் ஜாமீனில் வெளியே வந்தான். ஆனால் வழக்கு விசாரணைகளின்போது கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தான். அவனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.   பிடிபட்டான் அப்துல் ரகுமானை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.  நேற்று முன்தினம் பெங்களூர் ஆடுகோடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அப்துல் ரகுமான் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் அந்த வீட்டில் போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த அப்துல் ரகுமானை போலீசார் கைது செய்தனர். பாகிஸ்தானில் இருந்து போலீசார் நடத்திய விசாரணையில், ஜெயிலை விட்டு வெளியே வந்த நாளில் இருந்து அப்துல் ரகுமான் லஸ்கர்-இ-தொய்பா அமைப்பு நிர்வாகிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தது தெரிய வந்தது.  பெங்களூரில் முக்கிய இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்த அவனுக்கு பாகிஸ்தானில் இருந்து லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதைகள் பணம் அனுப்பியதும், இந்து அமைப்புகளை சேர்ந்த முக்கிய தலைவர்களை கொலை செய்யும்படி அவனுக்கு உத்தரவிட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.  

குல்பர்கா ஜெயிலில் உள்ள பகாத், அப்சர் ஆகிய 2 பேரையும் கோர்ட்டுக்கு கொண்டு வரும் வழியில், போலீசாரை தாக்கிவிட்டு, அவர்களை மீட்டு பாகிஸ்தானுக்கு அனுப்பவும் அவர்கள் திட்டம் வகுத்தனர். இதற்காக 4 இளம் தீவிரவாதிகளை அனுப்புவதாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் கூறினர் என்றும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.  

மேற்கண்ட தகவல்களை பெங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் ஜோதிபிரகாஷ் மிர்ஜி நேற்று நிபர்களிடம் தெரிவித்தார்.  மேலும் அவர் கூறும்போது, "கைது செய்யப்பட்டு உள்ள 2 தீவிரவாதிகளிடமும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். 

அவர்களுக்கு யார்? யாருடன் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். கண்டிப்பாக இவர்களது தொடர்பு எல்லை பெரிதாக இருக்கும் என்று எங்களுக்கு சந்தேகம் உள்ளது'' என்றார். லஸ்கர்-இ-தொய்பா இயக்கத்துடன் தொடர்புடைய தீவிரவாதியை பெங்களூர் போலீசார் கைது செய்து இருப்பதன் மூலம் பெங்களூரில் அவர்கள் நடத்த இருந்த நாசவேலைகள் முறியடிக்கப்பட்டு உள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post