யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து யாழ் நகரில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. தமிழ் தேசிய் மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் தமிழ் கட்சிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.