Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கை: அமெரிக்கா-பாகிஸ்தான் இடையே மோதல்



தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கை தொடர்பாக பாகிஸ்தான், அமெரிக்கா இடையே திடீர் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

பல்வேறு தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் புகழிடமாக விளங்குகிறது என அமெரிக்கா குற்றம்சாட்டியது.

தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் எல்லைப்பகுதியில் தாக்குதல் அதிகரிக்கும் என்றும் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தது.

மேலும் பாகிஸ்தானின் மெத்தனத்தால் ஆப்கானிஸ்தானில் இருக்கும் வெளிநாட்டு படைக்கு நெருக்கடி ஏற்படுவதாக அமெரிக்க மற்றும் நேட்டோ அதிகாரிகள் கூறுகிறார்கள்.

அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டிற்கு பாகிஸ்தான் ராணுவ தளபதியான காலித் ரப்பானி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கை குறித்து அமெரிக்கா, பாகிஸ்தான் இடையே திடீர் மோதல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post