உத்தரபிரதேச மாநிலத்தின் கட்ராபஜார் தொகுதி பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பவன்சிங். இவருடைய மகன் கவுரவ்சிங் நேற்று அங்கு உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
அங்கு கவுரவின் வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக அவருக்கும், ஆஸ்பத்திரி பாதுகாவலர் பான்டேவுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி இருவரும் துப்பாக்கியால் ஒருவரையொருவர் சரமாரியாக சுட்டனர்.
இந்த சண்டையில் காயமடைந்த 2 பேரையும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு எம்.எல்.ஏவின் மகன் கவுரவ் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். படுகாயம் அடைந்த பான்டே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.