
இந்த விழாவுக்கு முதல்வர் ஜெயலலிதா முன்னிலை வகித்துள்ளார். விழாவில் வைரவிழா மலரை தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட அதை குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி பெற்றுக்கொண்டார்.
மேலும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி கட்டடத்திற்கு குடியரசுத்தலைவர் பிரணப் முகர்ஜி அடிக்கல் நாட்டுகிறார். விழாவையொட்டி சட்டமன்ற கட்டடம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக 5 ஆயிரம் காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.