விமானிகள் போராட்டத்தைத் தொடர்ந்து நீதிமன்றத்துக்கு செல்கிறது ஏர் இந்தியா நிறுவனம்

நேற்று விமானிகள் சங்கத்தின் அங்கீகாரத்தை ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்தது. அந்த சங்கத்தைச் சேர்ந்த 10 விமானிகளைப் பணிநீக்கம் செய்தது. 

விமானிகள் போராட்டம் தொடர்வதால் பிரச்னைக்குத் தீர்வு காண நீதிமன்றத்தை அணுக முடிவெடுத்துள்ளது ஏர் இந்தியா நிர்வாகம் என்று தகவல்கள் கூறப்படுகிறது. 

ஏர் இந்தியா நிறுவனத்தின் மிகப்பெரும் நிதிச்சுமையை மத்திய அரசு தீர்த்துள்ளது. கடந்த மூன்று மாதங்களாக நன்றாகச் செயல்பட்டு வந்தது. மேலும் தொடரும் என நம்புகிறேன். விமானிகளின் போராட்டம் சட்டவிரோதமானது, வேலைநிறுத்தம் தொடர்பாக நோட்டீஸ் கொடுக்க வேண்டும். தர்மாத்திகரி அறிக்கையில் இவையெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளன, பிரச்னைக்குத் தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் அஜீத்சிங் கூறியுள்ளார்.