சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு ! ஜெயலலிதா

முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று 110 வது விதியின் கீழ் சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டார். 

அதில் தென்னிந்திய சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் அமைப்பின் ஒப்பந்தப்படி நிலுவை தொகை வழங்கப்படும் எனவும் 2008ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து கணக்கிட்டு 10 சதவீதம் நிலுவைத் தொகை வழங்கப்படும். 

2012ம் ஆண்டின் ஏப்ரல் 1 முதல் கணக்கிட்டு புதிய ஊதியத்தில் 25 சதவீதம் சிறப்பு ஊதியமாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.