நீண்ட காலத்தின் பின் வழங்கப்பட்டுள்ள கடவுச்சீட்டு; நோபல் பரிசிற்காக நோர்வே பயணமாகிறார் சூகி



மியன்மார் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூகிக்கு கடந்த 24 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக கடவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

மியன்மாரில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுவரும் நிலையில், அரசாங்கத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இராணுவ ஆட்சிக்கு எதிராக செயற்பட்டதை அடுத்து, இரண்டு தசாப்தங்களுக்கும் அதிகமாக ஆங் சான் சூகி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

அரசாங்கத்தால் கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ள நிலையில், 1991 ஆம் ஆண்டு தமக்கு கிடைக்கப்பெற்ற சமாதானத்திற்கான நோபல் பரிசைப் பெறும் நோக்கில் அவர் நோர்வே பயணிக்கவுள்ளார்.

அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளுக்கும் ஆங் சான் சூகி பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.