தென்ஆப்ரிக்கா அமைச்சர் மரணம் டாக்டர் ராமதாஸ் இரங்கல்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- 

தென்ஆப்ரிக்க கேபினட் அமைச்சரும், வன்னிய சமுதாயத்தை சேர்ந்தவருமான ராதாகிருஷ்ண லட்சுமண ராய் படையாச்சி எத்தியோப்பியா நாட்டில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, கடுமையான உடல்நலக் குறைவால் கடந்த 5-ந் தேதி சனிக்கிழமை காலமானார் என்ற செய்தி கேட்டு கடும் அதிர்ச்சியும், வேதனையும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன். 

சென்னையை அடுத்த ஊரமங்கலம் கிராமத்தை பூர்விகமாகக் கொண்ட ராதாகிருஷ்ண படையாச்சியின் முன்னோர்கள், ஆங்கிலேயர் காலத்தில் தென்ஆப்ரிக்காவில் குடியேறினர். ராய்படையாச்சி, தென்ஆப்ரிக்காவின் முன்னேற்றத்திற்காகவும், அங்குள்ள தமிழர்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும், தமது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர். 

தமிழ்நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் நலனிலும் அக்கறை கொண்ட ராய்படையாச்சி, அவர்களின் முன்னேற்றம் குறித்து என்னிடம் அடிக்கடி விவாதிப்பார். அவரது மறைவு தென்ஆப்ரிக்காவுக்கும், உலக தமிழ் மக்களுக்கும், வன்னிய சமுதாயத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.