இரும்பு உருக்காலைகளை அமைக்க கடந்த 10 ஆண்டுகளாக பிரச்சினைகளை எதிர்நோக்குகிறோம்: லட்சுமி மிட்டல்

இந்தியாவில் இரும்பு உருக்காலைகளை ஜார்கண்ட், ஒடிசா மாநிலத்திலும் அமைத்து வருகின்றனர். 

இவை ஒவ்வொரு தொழிற்சாலை மூலம் வருடத்துக்கு 12 மில்லியன் டன் இரும்பு உற்பத்தி செய்யலாம். ஆனால், நில ஆக்கிரமிப்பினாலும் அந்தப் பகுதியினரின் எதிர்ப்பினாலும் இந்தத் திட்டம் முடங்கியுள்ளது. 

இதேபோல் கர்நாடகாவில் கிரீன்பீல்டில் 6 மில்லியன் டன் தயாரிப்பு திட்டமும் கிடப்பில் உள்ளது. இது குறித்து உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான இந்தியாவை சேர்ந்த லட்சுமி மிட்டல் இன்று பங்குதாரர்கள் கூட்டத்தில் பேசும்போது கூறியதாவது:- 

இந்தியாவில் இரும்பு உருக்கு ஆலை அமைக்க முதலீடு செய்ய பல ஆண்டுகளாக முயன்றாலும், அதன்மூலம் பிரச்னைகளை எதிர்நோக்கியிருக்கிறோம். இந்தியாவில் ஏற்படும் பிரச்னைகளே எங்களுக்கு அனுபவமாக அமைகின்றன, இவை ஐந்து முதல் பத்தாண்டுகளாகத் தொடர்கின்றன என்று கூறினார்.