ஆருஷி மற்றும் அவரது உதவியாளர் கொலை தொடர்பான வழக்கு இன்று காஜியாபாத் சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.
இதற்காக நுபுர் தல்வாரும் ராஜேஷ் தல்வாரும் இன்று கோர்ட்டில் ஆஜராகின்றனர். அதே சமயம், வழக்கு விசாரணையை வேறொரு கோர்ட்டுக்கு மாற்றக் கோரும் மனுவும் ஜாமீன் கோரும் மனுவும் சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு வருகிறது.
நுபுர் தல்வார் சிறையில் அடைபட்டு 10 நாட்களாகின்றன. அதிர்ஷ்டமில்லாத தாயின் கதை என்ற பெயரில் கதை எழுதுவதற்கு சிறை அதிகாரிகளின் அனுமதி கேட்டிருக்கிறார் என்று சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.