இடிந்தகரையில் மீண்டும் தலைதூக்கும் காவல்துறை அராஜகம்

இடிந்தகரையில் எந்த நேரத்திலும் காவல் துறை தங்கள் அராஜகத்தை கட்டவிழ்த்து விடும் எனத் தெரிகிறது . அங்கு போராடிவரும் மக்களை கைது செய்து போராட்டத்தை ஒடுக்கிவிடும் சூழ்ச்சியில் இப்போது அரசு இறங்கிவுள்ளது. மேலும் கூடங்குளம் அணு உலையில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக இருவர் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர். 

அவர்களை சந்திப்பதற்கு அவர்களின் உறவினர்களுக்கு கூட அனுமதி கொடுக்கப்படவில்லை. இதனால் போராட்டம் தீவிரமாகும் என அஞ்சி அரசு தன்னுடைய பலத்தை பயன்படுத்தி இன்று போராட்டத்தை ஒடுக்க அதிரடியாக களமிறங்கி உள்ளது என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.