அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியக்குழு 3-வது வார்டு உறுப்பினர் ஜி.ஏ.தங்கவேல் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

வேலூர் புறநகர் மேற்கு மாவட்டம், நாட்றம்பள்ளி ஒன்றியம், திம்மாம்பேட்டை ஊராட்சி கழக செயலாளர் டி.ஜே.நாராயணசாமி, கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு 14-வது வார்டு உறுப்பினர் அமளோபாகம், வடசென்னை வடக்கு மாவட்டம், ஆர்.கே.நகர் தொகுதி 14-வது வட்ட அவைத்தலைவர் ச.ராஜேந்திரன் ஆகியோர் மரணமடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
ஜி.ஏ.தங்கவேல், நாராயணசாமி, அமளோபாகம், ராஜேந்திரன் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.