அ.தி.மு.க. கவுன்சிலர் கொலை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் ஜெயலலிதா அறிக்கை

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- 

நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியக்குழு 3-வது வார்டு உறுப்பினர் ஜி.ஏ.தங்கவேல் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். 

இந்த படுகொலையை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 

வேலூர் புறநகர் மேற்கு மாவட்டம், நாட்றம்பள்ளி ஒன்றியம், திம்மாம்பேட்டை ஊராட்சி கழக செயலாளர் டி.ஜே.நாராயணசாமி, கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு 14-வது வார்டு உறுப்பினர் அமளோபாகம், வடசென்னை வடக்கு மாவட்டம், ஆர்.கே.நகர் தொகுதி 14-வது வட்ட அவைத்தலைவர் ச.ராஜேந்திரன் ஆகியோர் மரணமடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். 

ஜி.ஏ.தங்கவேல், நாராயணசாமி, அமளோபாகம், ராஜேந்திரன் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.